சர்வதேச பாராலிம்பிக் தடகளப் போட்டி : கோவையை சேர்ந்த வீரர் இரு வெள்ளி வென்று அசத்தல்

கோவை : 4-வது சர்வதேச பாராலிம்பிக் போட்டியில் கோவையை சேர்ந்த வீரர் இரு வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தினார்.

கோவை : 4-வது சர்வதேச பாராலிம்பிக் போட்டியில் கோவையை சேர்ந்த வீரர் இரு வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தினார்.

வட ஆப்ரிக்காவின் மொராக்கோ பகுதியில் உள்ள கிராண்ட் ஸ்டேடியத்தில் 4-வது சர்வதேச பாராலிம்பிக் போட்டி கடந்த ஏப்.,25ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், 100 மீட்டர் வீல் சேர் போட்டியில் இந்தியாவின் சார்பில் மனோஜ்குமார் (28) கலந்து கொண்டார். 16.29 விநாடிகளில் இலக்கை அடைந்து, 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இதேபோல, 200 மீட்டர் வீல் சேர் போட்டியில் 30.08 விநாடிகளில் இலக்கை அடைந்து, அதிலும் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். வெறும் .75 வினாடிகளில் முதலிடத்தை தவறவிட்ட மனோஜ்குமார், துபாயில் ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கும் சர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். 



“உடல் ஊனம் சாதனகளுக்கு எந்தவித தடையும் இல்லை. 4 ஆண்டுகளாக கடினமாக உழைத்ததன் விளைவாக தற்போது இந்த சர்வதேச பதக்கங்களை வென்றேன். எனது சாதனை கனவுகளை அடைய இன்னும் தொடர்ந்து கடினமாக உழைப்பேன்,” என்றார் பதக்கம் வென்ற மனோஜ் குமார்.



Newsletter