கோவை ஐ.பி.எல். ஃபேன் பார்க்கில் அலைமோதிய கிரிக்கெட் ரசிகர்களின் கூட்டம்

கோவை : கோவை கொடிசியாவில் கடந்த இரு தினங்களாக போடப்பட்ட ஐ.பி.எல். ஃபேன் பார்க்கில் பங்கேற்ற 12,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஆர்வத்துடன் கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளித்தனர்.

கோவை : கோவை கொடிசியாவில் கடந்த இரு தினங்களாக போடப்பட்ட ஐ.பி.எல். ஃபேன் பார்க்கில் பங்கேற்ற 12,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஆர்வத்துடன் கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளித்தனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை மைதானத்திற்கு சென்று காணும் அனுபவத்தை கிரிக்கெட் ரசிகர்களுக்கு வழங்கும் நோக்கில், நாடு முழுவதும் விவோ ஐ.பி.எல். ஃபேன் பார்க்கை பி.சி.சி.ஐ. அறிமுகம் செய்துள்ளது. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில், மிகப்பெரிய திரையில் கிரிக்கெட் போட்டி ஒலி பரப்பப்படுகிறது. ஒரே நேரத்தில் இந்த ஃபேன் பார்க்கில் சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் கிரிக்கெட் போட்டிகளை பார்த்து ரசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், 4-வது ஆண்டாக கோவை கொடிசியா மைதானத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஐ.பி.எல். ஃபேன் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை நடந்த டெல்லி - ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு - ஐதராபாத் அணிகளும் பலப்பரிட்சை நடத்தின. இதனை பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் கண்டுகளித்தனர். இதேபோல, நேற்று மாலை 4 மணிக்கு சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை எதிர்பார்த்ததை விட 12,000 ரசிகர்கள் திரண்டனர்.



“கோவையில் 4-வது ஆண்டாக ஐ.பி.எல். ஃபேன் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை இல்லாத அளவிற்கு இந்த முறை கூட்டம் அலைமோதியுள்ளது. 8,000 முதல் 10,000 பேர் வருவார்கள் என் எதிர்ப்பார்த்திருந்தோம். ஆனால், 12,000-க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்தனர். இது இந்த ஆண்டில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்,” என்றார் ஒருங்கிணைப்பாளர் குழுவைச் சேர்ந்த ஜாகீர்.

சி.எஸ்.கே. ரசிகர் மன்றத்தை சேர்ந்த பிரபு கூறுகையில், “கோவையில் எந்தவொரு ஐ.பி.எல். போட்டிகளும் நடைபெறுவதில்லை. ஆனால், இங்கு அதிகளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். தற்போது, 12,000 ரசிகர்கள் என்பதே கூடுதலான எண்ணிக்கை. இந்த மாலைப் பொழுது மஞ்சள் நிறத்திற்கானது,” எனக் கூறினார்.



மும்பை இந்தியன்ஸ் ரசிகரான 4-ம் வகுப்பு மாணவன் பி.அக்சய், கொல்கத்தா- மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அதேபோல, சென்னை ரசிகரான ஆதித்யா என்ற பள்ளி மாணவன், சென்னை தோல்வியடைந்தாலும், தொடர்ந்து மும்பை - கொல்கத்தா போட்டியை கண்டு களித்தார்.

Newsletter