வரும் மே 10-ம் தேதி முதல் கற்பகம் பல்கலைக்கழகத்தில் இலவச விளையாட்டு பயிற்சி முகாம் தொடக்கம்

கோவை : கற்பகம் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிக்கான இலவச பயிற்சி முகாம் வரும் மே 10-ம் தேதி தொடங்குகிறது.

கோவை : கற்பகம் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிக்கான இலவச பயிற்சி முகாம் வரும் மே 10-ம் தேதி தொடங்குகிறது. 

கிராமப்புறங்களில் இருக்கும் மாணவ, மாணவிகளின் விளையாட்டுத் திறமையை வெளிக்கொண்டு வரும் நோக்கில், கற்பகம் கல்வி நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் இலவச விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சி முகாம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும், கபடி, வாலி பால், கைப்பந்து, சிலம்பம், களரி ஆகிய போட்டிகளுக்கான இலவச பயிற்சி முகாம் வரும் 10-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர்கள் மற்றும் அனுபவ வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இந்தப் பயிற்சி முகாமை சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்தி, மாணவர்கள் அவர்களது திறமைகளை வெளிப்படுத்தலாம். கற்பகம் உயர் கல்வி அகாடமியின் சார்பில் பல்வேறு தேசிய, சர்வதேச தடகள வீரர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு சிலர், அஜித்குமார் (கபடி - தமிழ் தலைவாஸ்), டி. ராஜா (தெற்காசி விளையாட்டு, சிலம்பம் போட்டியில் தங்கம்) ஜீவிதா (ஆசிய விளையாட்டுப் போட்டி), கவிதா (சீனியர் தேசிய கைப்பந்து போட்டிக்கு தேர்வானவர்) ஆகியோர் ஆவர்.

Newsletter