வரும் 19-ம் தேதி எஸ்.கே. கிரிக்கெட் அகாடமியின் இலவச பயிற்சி முகாமிற்கான வீரர்கள் தேர்வு

கோவை : எஸ்.கே. கிரிக்கெட் அகாடமியின் இலவச பயிற்சி முகாமிற்கான வீரர்கள் தேர்வு வரும் மே 19-ம் தேதி நடைபெறுகிறது.


கோவை : எஸ்.கே. கிரிக்கெட் அகாடமியின் இலவச பயிற்சி முகாமிற்கான வீரர்கள் தேர்வு வரும் மே 19-ம் தேதி நடைபெறுகிறது.



கோவையில் செயல்பட்டு வரும் சிறந்த கிரிக்கெட் பயிற்சி மையங்களில் எஸ்.கே. கிரிக்கெட் அகாடமியிம் ஒன்று. 5 வலைப்பயிற்சி அமைப்பும், 3 டர்ஃப் பிட்சுகளும், 2 பவுலிங் மெஷின்களையும் இந்த பயிற்சி மையம் கொண்டுள்ளது. அதோடு, வீரர்கள் 24 மணி நேரமும் பயிற்சி பெற விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எஸ்.கே. கிரிக்கெட் அகாடமியின் இலவச பயிற்சி முகாமிற்கான வீரர்கள் தேர்வு வரும் மே 19-ம் தேதி நடைபெறுகிறது. இதில், தேர்வு செய்யப்படும் 50 வீரர்களுக்கு 20-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தேசிய விளையாட்டு கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 2 திறமை வாய்ந்த பயிற்சியாளர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. முன்பதிவிற்கு, 91 7373793434.

Newsletter