குன்னூரில் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி : அமெரிக்கா வாழ் தமிழக வீரர் முதலிடம்

நீலகிரி : கோடை விடுமுறையையொட்டி, குன்னூரில் நடைபெற்ற தேசிய அளவிலான 3-ம் ஆண்டு டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவில் படிக்கும் தமிழக மாணவன் முதலிடம் பிடித்தார்.

நீலகிரி : கோடை விடுமுறையையொட்டி, குன்னூரில் நடைபெற்ற தேசிய அளவிலான 3-ம் ஆண்டு டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவில் படிக்கும் தமிழக மாணவன் முதலிடம் பிடித்தார்.



குன்னூர் நியூசோசியல் கிளப் சார்பில் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகள் கடந்த 7-ம் தேதி முதல் குன்னூரில் நடத்தப்பட்டு வருகின்றது. இதில், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், 14 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்கள் என மூன்று வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், தமிழகம், புதுவை, கர்நாடகா, ஆந்திராவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 



இந்தப் போட்டியில் இளையோருக்கான இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், அமெரிக்காவில் கல்வி பயின்று வரும் தமிழகத்தை சேர்ந்த கிரண் தேவ் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். இவர், கோவையைச் சேர்ந்த கண்ணன் என்பவரை 2-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதில், வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு தொகையும், வெற்றி கோப்பைகளும் பரிசாக வழங்கப்பட்டது.

Newsletter