முதல் தமிழ்நாடு கோ-கோ பிரீமியர் லீக் போட்டிகள் கோவையில் 17-ம் தேதி தொடக்கம்

கோவை : தமிழ்நாடு கோ-கோ பிரீமியர் லீக் முதல் சீசன் போட்டிகள் கோவையில் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது.

கோவை : தமிழ்நாடு கோ-கோ பிரீமியர் லீக் முதல் சீசன் போட்டிகள் கோவையில் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. 

தமிழ்நாடு கோ-கோ கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு கோ-கோ பிரீமியர் லீக் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஸ்ரீ ரங்கநாதர் பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் 17-ம் தேதி தொடங்கும் இந்த முதல் சீசன் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில், தேசிய மற்றும் சர்வதேச வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். மொத்தம் 60 வீராங்கனைகள் உள்பட 180 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 

இந்தப் போட்டியில் கலந்து கொள்ள 850 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போதைய ஆட்டத்திறனின் அடிப்படையாகக் கொண்டு சென்னையில் வீரர்கள் தேர்வு நடைபெற்றது. தேசிய, மாநில பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் விளையாடியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு அணியிலும் உள்ளூர் வீரர்கள் 2 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். 

அணிகளின் விபரம் : கோவை சேசர்ஸ், சென்னை டைகர்ஸ், புதுவை கொம்பன், மதுரை கோ-கோ கிங்ஸ், திருச்சி சூப்பர் கிங்ஸ், திருவள்ளூர் சீட்டாஸ், கிருஷ்ணகிரி ஹண்ட்டிங் ஈகிள், ஈரோடு யங் லையன்ஸ் உள்ளிட்ட 8 ஆண்கள் அணிகள் உள்ளன. அதேபோல, கோவை ஸ்பீடிஸ், சென்னை குயின்ஸ், மதுரை ப்ளூ பேந்தர்ஸ், ஈரோடு ராயல் ராப்பர்ஸ் ஆகிய 4 பெண்கள் அணிகள் இடம்பெற்றுள்ளன. 

ஸ்ரீ ரங்கநாதர் பலிடெக்னிக் கல்லூரியில் கோவை ஆண்கள் அணியும், நாராயண குரு கல்லூரியில் பெண்கள் அணியும் பயிற்சி பெற்று வருகின்றன. 

Newsletter