நீலகிரியில் எச்.ஆர்.எம் கோப்பைக்கான ஐவர் கால்பந்து போட்டி தொடக்கம்

நீலகிரி : கோத்தகிரியில் நீலகிரி எஃப்சி சார்பில் எச்.ஆர்.எம் கோப்பைக்கான ஐவர் மட்டும் விளையாடும் கால்பந்து போட்டி நடைபெற்றது.

நீலகிரி : கோத்தகிரியில் நீலகிரி எஃப்சி சார்பில் எச்.ஆர்.எம் கோப்பைக்கான ஐவர் மட்டும் விளையாடும் கால்பந்து போட்டி நடைபெற்றது. 

நீலகிரி மாவட்டதில் உள்ள கால் பந்தாட்ட இளம் வீரர்ளை உருவாக்கும் வகையில் 10, 12 ,14 வயதுக்குட்பட்டோருக்கான மாவட்ட அளவில் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இது லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் 80-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்கின்றனர்.



14 வயதுக்குட்பட்டவர்கள் ஆட்டத்தில் கேர்பன் அணியும், கடைகம்பட்டி அணியும் மோதின. இதில், கேர்பன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கடைகம்பட்டி அணியை வென்றது. இம்மாதம் இறுதிவரை நடைபெறும் இந்த போட்டிகளில் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் கால்பந்தாட்ட சிறுவர்கள் கலந்து கொண்டுள்ளதால் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Newsletter