உடுமலை அருகே மாநில அளவிலான பைக் பந்தயம்: 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

உடுமலை அருகே நடைபெற்ற மாநில அளவிலான பைக் பந்தயத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மாநில அளவிலான பைக் பந்தயம் நடைபெற்றது.



உடுமலை அடுத்த சின்னவீரம்பட்டியில் உடுமலை பி.எம்.டபூல்யூ பிரண்டஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 11ஆம் ஆண்டு மாநில அளவிலான பைக் பந்தயம் நடைபெற்றது.



ஓப்பன் கிளாஸ் ,இந்தியன் கிளாஸ், இக்ஸ்போர்ட் கிளாஸ், ஸ்போர்ஸ்டோக் கிளாஸ், பெண்கள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, இன்டிமெண்ட் கிளாஸ் உட்பட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.



வளைவு, நெளிவு கொண்ட புழுதிக் காட்டில் புழுதி பறக்க இருசக்கர வாகனங்களை வீரர்கள் போட்டி போட்டிக் கொண்டு மைதானத்தில் சீறி பாய்ந்தனர்.



மேலும் குறிப்பிட்ட இலக்கை குறிப்பிட்ட நேரத்தில் மிக வேகமாக அடைந்த வீரர்களுக்கு கோப்பைகளும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டது.



உடுமலையில் நடைபெற்ற மாநில அளவிலான பைக் பந்தயத்தில் மைதானத்தில் புழுதி பறக்க உறுமிய வாகனங்களைச் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளிலிருந்து எராளமானோர் கண்டு களித்தனர்.

Newsletter