திருப்பூரில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி - ஆர்வத்துடன் பங்கேற்ற இளைஞர்கள்

திருப்பூர் மாவட்ட ஜிம் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பாடி பில்டர்ஸ் நலச்சங்கம் இணைந்து நடத்திய ஆணழகன் போட்டியில், 50 முதல் 85 கிலோ வரை பல்வேறு பிரிவுகளில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.



திருப்பூர் யுனிவர்சல் திரையரங்கம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பூர் மாவட்ட ஜிம் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பாடி பில்டர்ஸ் நல சங்கம் சார்பாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.



இதில் 50 முதல் 85 கிலோ வரை பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற ஆணழகன் போட்டிகளில் இளைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் உடல் வடிவத்தை காட்டி திறமையை வெளிப்படுத்தினர்.



ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ரொக்க பரிசுடன், நினைவுப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.



இதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.



ஒவ்வொரு பிரிவில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ.2 லட்சம் வரையிலான ரொக்கப் பரிசு மற்றும் நினைவுப் பரிசு, பாராட்டு சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter