கிணத்துக்கடவு அருகே கல்லூரி மாணவர்களுக்கிடையேயான செஸ் போட்டி!

கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளம் பகுதியில் அர்ஜூன் தொழில் நுட்ப கல்லூரியில் பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான நடைபெற்ற செஸ் போட்டியில் 31 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்பு.


கோவை: கிணத்துகடவு அருகேயுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற செஸ் போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக் குளம் பகுதியில் செயல்பட்டு வரும் அர்ஜூன் தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கிடையே விளையாட்டு திறனை மேம்படுத்தவும், செஸ் விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொறியியல் கல்லூரிகள் விளையாட்டு சங்கம் சார்பில் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையேயான 12வது செஸ் போட்டி நடைபெற்றது.



இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலிருந்து 31 கல்லூரிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.



முன்னதாக சர்வதேச செஸ் போட்டியின் நடுவர் ரத்னம் ஆனந்தராம் கலந்து கொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தார். போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் வெற்றி இலக்கை நோக்கி செஸ் காய்களை நகர்த்தி சாதுர்யத்துடன் விளையாடினர்.



இந்த போட்டியில் கலந்துகொண்டு தொடர் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு வின்னர், ரன்னர், என்ற பிரிவுகள் அடிப்படையில் பரிசு கோட்டைகள் வழங்கப்பட்டது.

Newsletter