இந்திய தேசிய சாம்பியன்ஷிப் கார் பந்தயப் போட்டியில் கோவை வீரர் சாம்பியன்

எம்ஆர்எஃப் எம்எம்எஸ்சி எஃப்எஸ்சிஐ இந்தியன் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, கோவை எம்எம்ஆர்டி கார் பந்தய மைதானத்தில் நடந்தது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். 

சனிக்கிழமை நடந்த ஃபார்முலா எஃப்1 1600 பந்தையத்தில் ஐதராபாத்தை சேர்ந்த் அனிந்த் ரெட்டியும், ஃபார்முலா எல்ஜிபி 1300 தேசிய மற்றும் ரூக்கி பிரிவில் ஆர்யா சிங்கும், டெல்லியை சேர்ந்த கர்மீந்தர்பால் சிங் வோல்க்ஸ் வோகன் ஆமியோ கோப்பையையும் வென்றனர். இந்தப் போட்டியின் சென்னையை சேர்ந்த சந்தீப்குமார் 138 புள்ளிகளை பெற்றார். 

இந்தியன் ஜுனியர் டூரீங் கார், சூப்பர் ஸ்டாக் மற்றும் எஸ்டிம் கோப்பை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கார் பந்தயம் நடத்தப்பட்டது. இதில், ஐதராபாத் வீரர் அனித் ரெட்டிக்கு சிறப்பான போட்டியாக அமையவில்லை. முதல் சுற்றை முழுமை செய்யாத அவர், அடுத்த இரண்டு சுற்றுகளை 2 மற்றும் 3-வது இடத்தை பிடித்ததால், அமெரிக்காவில் இந்த ஆண்டு நடக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். 

சென்னை வீரர் சந்தீப் குமார் எம்ஆர்எஃப் எஃப்1 1600 பிரிவில் மூன்று சுற்றுகளிலும் வெற்றி பெற்றாலும், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 2-வது இடத்தையே பிடித்துள்ளார்.

இதேபோல, இந்தியன் டூரீங் கார் பந்தையத்தில் 3-வது இடம் பிடித்தாலே மீண்டும் சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொள்ளலாம் என்ற நிலையில், நடப்பு சாம்பியன் அர்ஜின் நரேந்திரன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம், பெங்களூரூ வீரர் தீபக்பால் சின்னப்பாவை விட 12 புள்ளிகள் அதிகம் பெற்று இந்த பட்டத்தை வென்றுள்ளார். 

வெற்றி பெற்றது குறித்து அர்ஜின் நரேந்திரன் பேசுகையில், போட்டியின் 2-வது பாதியில் நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தடுத்து சாம்பியன் பட்டத்தை வெல்வது என்னை சிலிர்க்க வைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter