தேசிய அளவிலான டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி : ராஜஸ்தான் வீரர் சாம்பியன்

கோவை: கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஃபைசல் கமர் சாம்பியன் பட்டம் வென்றார்.

கோவை: கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஃபைசல் கமர் சாம்பியன் பட்டம் வென்றார்.

கே.ஜி., ரமேஷ் டென்னிஸ் அகாடமியின் சார்பில் கடந்த 3-ம் தேதி தேசிய அளவிலான டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவை குணா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸில் நடைபெற்றது. 

பெண்கள், ஆண்கள் ஒற்றையர் பிரிவு மற்றும் இரட்டையர் பிரிவு போட்டிகள் கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்டன. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, ஒடிசா, தெலுங்கானா மற்றும் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 64 வீரர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஃபைசல் கமர், டெல்லியைச் சேர்ந்த அனுராக் நென்வானியை 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 

இதேபோல, பெண்கள் பிரிவில் தெலுங்கானாவைச் சேர்ந்த நிதி ஜிலுமுலா, கர்நாடகாவைச் சேர்ந்த வீராங்கனை தீக்ஷா மஞ்சு பிரசாத்தை 6-2, 6-1 என்ற நேர் செட்கணக்கில் வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter