பி.எஸ்.ஜி டிராபி கூடைப்பந்து போட்டிகள் : இரண்டாம் நாளில் பெரிய வெற்றி பெற்றது இந்திய ராணுவ அணி

கோவை: பி.எஸ்.ஜி டிராபி கூடைப்பந்து போட்டிகளின் இரண்டாம் நாளான நேற்று இந்திய ராணுவ அணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.



கோவை: பி.எஸ்.ஜி டிராபி கூடைப்பந்து போட்டிகளின் இரண்டாம் நாளான நேற்று இந்திய ராணுவ அணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.



பி.எஸ்.ஜி டிராபிக்கான 54-வது தேசிய கூடைப்பந்து போட்டிகள் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி மைதானத்தில் தொடங்கின. 



லீக் போட்டியாக நடக்கும் இந்த கூடைப்பந்து போட்டியின் முதல் நாளில், இந்திய ராணுவ அணி, இந்திய வங்கி அணியிடம் தோற்றது. இரண்டாம் நாளில், ஐ.சி.எப் அணியை 44 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. 

மற்றொரு ஆட்டத்தில், ரயில்வே அணியும், இந்திய விமானப்படை அணியும் மோதின. இதில், 60-க்கு 73 என்ற புள்ளிகள் கணக்கில் ரயில்வே அணி வெற்றிபெற்றது.



மூன்றாவது ஆட்டத்தில், கேரளா சுங்கவரித்துறை அணி மற்றும் சென்னை வருமான வரித்துறை அணிகள் மோதின. இதில் 7 புள்ளிகள் வித்தியாசத்தில் கேரளா சுங்கவரித்துறை அணி வெற்றி பெற்றது.



நான்காவது ஆட்டத்தில், பெங்களூர் விஜயா வங்கி மற்றும் சென்னை இந்தியன் வங்கி அணிகள் மோதின. இதில், விஜயா வங்கி அணி வெற்றி பெற்றது. லீக் போட்டியில் இந்த அணியின் இரண்டாவது வெற்றியாகும். இந்த போட்டியில் விஜயா வங்கி அணி 20 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Newsletter