54-வது அனைத்து இந்திய கூடைப்பந்து போட்டி : விஜயா பேங்க், இந்திய ரயில்வே அணிகள் அரையிறுதிக்கு தகுதி

கோவை: 54-வது அனைத்து இந்திய கூடைப்பந்து போட்டியில் விஜயா பேங்க், இந்திய ரயில்வே அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

கோவை: 54-வது அனைத்து இந்திய கூடைப்பந்து போட்டியில் விஜயா பேங்க், இந்திய ரயில்வே அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.



பி.எஸ்.ஜி., கோப்பைக்கான இந்தப் போட்டித் தொடர் பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லூரியின் உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. 

3-வது நாளாக லீக் அடிப்படையில் நடந்து வரும் இப்போட்டியின் ஏ பிரிவில் தொடர்ச்சியாக 3-வது ஆட்டத்தில் வெற்றி பெற்று விஜயா பேங்க் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இதேபோல, பி பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய ரயில்வே மற்றும் சுங்கத்துறை அணியும் அரையிறுதிக்கு தகுதிபெற்றது. 



நேற்றைய முதல் போட்டியில், இந்தியன் பேங்க் அணி 78-55 என்ற புள்ளிகள் கணக்கில் ஐ.சி.எப்., அணியை தோற்கடித்தது. இந்த கூடைப்பந்து போட்டியின் அரையிறுதி போட்டிகள் இன்று நடக்கின்றன.

Newsletter