54-வது அனைத்து இந்தியா கூடைப்பந்து போட்டி : இறுதிப் போட்டியில் விஜயா பேங்க் மற்றும் வருமான வரித்துறை அணிகள்

கோவை : 54-வது அனைத்து இந்திய கூடைப்பந்து போட்டியில் விஜயா பேங்க் மற்றும் இந்திய ரயில்வே அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

கோவை : 54-வது அனைத்து இந்திய கூடைப்பந்து போட்டியில் விஜயா பேங்க் மற்றும் இந்திய ரயில்வே அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. 



பி.எஸ்.ஜி., கோப்பைக்கான இந்தப் போட்டித் தொடர் பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லூரியின் உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டியின் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறிய சென்னை வருமான வரித்துறை மற்றும் இந்தியன் பேங்க் அணிகள் நேற்று பலபரீட்சை நடத்தின. இதில், 66-64 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்ற வருமான வரித்துறை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதிகபட்சமாக ஜீவானந்தம் 21 புள்ளிகளை எடுத்து அந்த அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.



இதேபோல, மற்றொரு போட்டியில் விஜயா பேங்க் அணி, 92-64 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய ரயில்வே அணியை எளிதில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று மாலை நடைபெறும் இறுதிப் போட்டியில் விஜயா பேங்க் மற்றும் சென்னை வருமான வரித்துறை அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. வெற்றி பெறும் அணிக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசுகளை கோவை மாநகர காவல் ஆணையர் கே. பெரியய்யா வழங்குகிறார். 2,3 மற்றும் 4-வது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.50,000, ரூ. 25,000 மற்றும் ரூ.15,000 தொகைக்கான பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. 

Newsletter