பி.எஸ்.ஜி டிராபி கூடைப்பந்து போட்டிகள் : டிராபியை வென்ற சென்னை வருமான வரித்துறை அணி

கோவை: பி.எஸ்.ஜி டிராபி கூடைப்பந்து போட்டிகளில் விஜயா வங்கி அணியை 82-க்கு 78 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை வருமான வரித்துறை வென்றுள்ளது.


கோவை: பி.எஸ்.ஜி டிராபி கூடைப்பந்து போட்டிகளில் விஜயா வங்கி அணியை 82-க்கு 78 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை வருமான வரித்துறை வென்றுள்ளது. 

பி.எஸ்.ஜி டிராபிக்கான 54-வது தேசிய கூடைப்பந்து போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

லீக் போட்டியாக நடக்கும் இந்த கூடைப்பந்து போட்டிகளின் நேற்றைய போட்டியில் விஜயா வங்கி அணியை 82-க்கு 78 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை வருமான வரித்துறை வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், ரயில்வே அணியை இந்தியன் வங்கி அணி 12 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது. 

ஒட்டுமொத்த சாம்பியன்சிப் வென்ற சென்னை வருமான வரித்துறை அணிக்கு ரூ.1 லட்சம் மற்றும் பி.எஸ்.ஜி டிராபி பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற அணிக்கு ரூ.50 ஆயிரமும், மூன்று மற்றும் நான்காம் இடம் பெற்ற அணிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது.

பரிசுகளை கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா வழங்கினார். இந்த நிகழ்வில், பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபால கிருஷ்ணன், பி.எஸ்.ஜி டெக் கல்லூரியின் முதல்வர் ருத்ரமூர்த்தி ஸ்ரீநிவாசன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter