மண்டல பொறியியல் கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் ஹிந்துஸ்தான் கல்லூரி சாம்பியன்

கோவை: சென்னை அண்ணா பல்கலைக்கழக சார்பில், கோவையில் 10-வது மண்டல பொறியியல் கல்லூரிகளுக்கான நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கோவை ஹிந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரி சாம்பியன் பட்டத்தினை வென்றது

கோவை:  à®šà¯†à®©à¯à®©à¯ˆ அண்ணா பல்கலைக்கழக சார்பில், கோவையில் 10-வது மண்டல பொறியியல் கல்லூரிகளுக்கான நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கோவை ஹிந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரி சாம்பியன் பட்டத்தினை வென்றது

அண்ணா பல்கலைக்கழக சார்பில் 10-வது மண்டல பொறியியல் கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டிகள் கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கடந்த எட்டு நாட்கள் நடைபெற்றது. 

இதில், 10-வது மணடலத்தில் இருந்து மொத்தம் 28 பொறியியல் கல்லூரிகளின் கிரிக்கெட் அணியினர் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில் கோவை ஹிந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லூரி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தினை வென்றது.

இரண்டாம் இடத்தினை பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியும், மூன்றாம் இடத்தினை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் பெற்றன. முதல் இடம் பிடித்த ஹிந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரியின் அணிக்கு சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது.

Newsletter