ஆந்திர சென்று தடகள போட்டியில் தங்கம் வென்ற கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்

கோவை: கோவை மாநகராட்சி பள்ளி மாணவர் விஜயவாடாவில் நடைபெற்ற தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை மாநகராட்சி பள்ளி மாணவர் விஜயவாடாவில் நடைபெற்ற தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்மண்டலத்திற்கு உட்பட்ட மாநிலங்களுக்கான தடகள போட்டிகள் நேற்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்றது. இதில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தடகள வீரர்கள் பங்கேற்றனர்.

இந்த போட்டிகளில் பங்கேற்க கோவையில் இருந்து 7 பேர் சென்றனர். ரத்தினபுரி பகுதி மாநகராட்சி பள்ளியில் படிக்கும் சதீஷ் என்ற மாணவர் 3000 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கத்தை வென்றார்.

தொடர்ந்து, ஆகாஷ், கிருத்திகா ஆகிய இருவர் 2000 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெண்கல பதக்கம் வென்றனர். மேலும், விஷ்ருதா என்ற மாணவி 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். இந்த போட்டிகளில் கோவையைச் சேர்ந்த வீரர்கள் 4 பதக்கங்களை வென்றனர்.

இது குறித்து பயிற்சியாளர் வைரவநாதன் சிம்ப்ளிசிட்டியிடம் பேசுகையில், "அனைவரும் மாவட்ட மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். அவர்களின் விடா முயற்சியால் தற்போது பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது." என்றார்.

Newsletter