மத்திய அரசின் கேல் ரத்னா விருதுக்கு கோஹ்லியின் பெயர் பரிந்துரை

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லியின் பெயர் மத்திய அரசின் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லியின் பெயர் மத்திய அரசின் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விளையாட்டில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு நாட்டின் உயரிய கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி, பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோரை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பரிந்துரை செய்துள்ளார்.



டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் கோஹ்லி 'நம்பர் - 1' இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு நடந்த உலக பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய், காமன்வெல்த் விளையாட்டிலும் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இந்திய விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது பாரா தடகள வீரர் தேவேந்திர ஜஜ்ஜாரியாவுக்கும், இந்திய ஹாக்கி அணி வீரர் சர்தார் சிங்குக்கும் வழங்கப்பட்டது. 

Newsletter