கோவையில் உடற்கல்வி ஆசியரிகளுக்கான 3 நாள் பயிற்சி முகாம் தொடக்கம்

கோவை : உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் கோவை நேரு மைதானத்தில் இன்று தொடங்கியது.


கோவை : உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் கோவை நேரு மைதானத்தில் இன்று தொடங்கியது.

 

இதில், தலைமை கல்வி அலுவலகத்தால் தேர்வு செய்யப்பட்ட பல்வேறு கல்வி நிலையங்கள் மற்றும் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இன்று முதல் 3 நாட்கள் நடக்கும் பயிற்சி முகாமில், தமிழக விளையாட்டு மேம்பாட்டுக் கழகத்தால் அறிமுகப்படுத்தவிருக்கும் விளையாட்டுகள் மற்றும் அவற்றின் விதிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. 



குறிப்பாக, ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், குத்துச்சண்டை, நீச்சல், சாலை மிதிவண்டி, பீச் வாலிபால், சிலம்பம், ஜுடோ, டேக்வண்டோ போன்ற விளையாட்டுகளின் விதிமுறைகள் பற்றி அனுபவமிக்க வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த முகாமில் பங்கேற்கும் ஆசியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் தினப்படி, பயணப்படிகளும் தமிழக விளையாட்டு மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்படுகிறது. 

Newsletter