கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டியில் என்.ஜி.பி கல்லூரி வெற்றி

கோவை: சங்கரா கல்லூரி சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 'ஏ' மண்டல கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டியில் என்.ஜி.பி கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது.

கோவை: சங்கரா கல்லூரி சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 'ஏ' மண்டல கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டியில் என்.ஜி.பி கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டிகளில் மொத்தம் 14 கல்லூரிகள் கலந்து கொண்டன. போட்டிகளை சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.



முன்னதாக, என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் சி.எம்.எஸ் கல்லூரி அணிகள் மோதின. இதில் 15 (34-19. புள்ளிகள் வித்தியாசத்தில் என்.ஜி.பி கலைக் கல்லூரி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

மூன்றாம் இடத்திற்காக நடைபெற்ற போட்டியில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா அணி சங்கரா கல்லூரி அணியை 6 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி துறையின் உதவி பேராசிரியர் குமரேசன், சங்கரா கல்லூரியின் முதல்வர் பாலகிருஷ்ணன் மற்றும் அக்கல்லூரியின் உடற்கல்வி துறை இயக்குனர் முனியசாமி ஆகியோர் வழங்கினர்.

Newsletter