ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.


ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துபாயில் இன்று ‘ஏ’ பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஐக்கிய அரபு அமீரகத்தில் இவ்விரு அணிகளும் 2006-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக சந்தித்தன. போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் இருந்தே கடும் சவாலாக திகழ்ந்தனர். 



இதனையடுத்து, களமிறங்கிய பாபர் அசாம், சோயிப் மாலிக்கும் இந்தியாவின் பந்துவீச்சுக்கு போட்டியாக ரன் கணக்கை தொடங்கினர். சிறப்பாக ஆடி 82 ரன்கள் இந்த ஜோடி சேர்த்த நிலையில், பாபர் அசாமை (47) வெளியெற்றினார் குல்தீப் யாதவ். இதற்கிடையே பந்து வீசும்போது முதுகு பகுதியில் வலி ஏற்பட்டு ஹர்திக் பாண்டியா கீழே விழுந்தார், அவர் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்டார். 

பாகிஸ்தானின் நட்சத்திரமாக விளையாடிய சோயிப் மாலிக் (43) ரன் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வீரர்கள் சீரான இடைவேளையில் விக்கெட்டுக்களை இழந்தனர். இறுதியில், பாகிஸ்தான் 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 162 ரன்களில் சுருண்டது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக புவனேஷ் குமாரும், கேதர் ஜாதவும் தலா மூன்று விக்கெட்களை எடுத்தனர். பும்ரா இரண்டு விக்கெட்களை எடுத்தார். குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டை எடுத்தார்.

இதைத் தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தவான் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா 36 பந்தில் அரைசதம் (52) விளாசி ஆட்டமிழந்தார். தொடர்ந்து தவானும் 46 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர், ஜோடி சேர்ந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், அம்பத்தி ராயுடு பொறுமையாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்தனர். இதன் மூலம், 8 விக்கெட்டு வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் தலா 31 ரன்கள் எடுத்து இருந்தனர். à®‡à®¨à¯à®¤ வெற்றியின் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்பை இந்திய அணி உறுதி செய்தது.

Newsletter