தேசிய டென்னிஸ் போட்டி: கால் இறுதி போட்டியில் வெற்றி பெற்றார் தமிழக வீரர்

கோவை: கேஜி ரமேஷ் டென்னிஸ் அகாடமி சார்பில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டியில் கர்நாடக வீரர் ரிஷி ரெட்டியை 6-4, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார் தமிழக வீரர் பரத் நிஷோக்.

கோவை: கேஜி ரமேஷ் டென்னிஸ் அகாடமி சார்பில் நடைபெற்று வரும் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டியில் கர்நாடக வீரர் ரிஷி ரெட்டியை 6-4, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார் தமிழக வீரர் பரத் நிஷோக்.

கோவையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியின் மற்றொரு கால் இறுதி போட்டியில் சண்டிகர் வீரர் நீரஜ் யாஷ்பால் என்பவரை 7-6 (7), 7-6 (5) என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்ற தமிழ வீரர் குஹன் ராஜன் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.



பெண்களுக்கான போட்டிகளில் தமிழக வீராங்கனை நித்யாராஜ் பாபுராஜை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கர்நாடக வீராங்கனை சாய் அவந்திகா வெற்றி பெற்றார். பெண்களுக்கான பிரிவில் கர்நாடகாவைச் சேர்ந்த சித்திக் மற்றும் டெல்லியைச் சேர்ந்த ரிஷிகா சுன்கரா ஆகியோர் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இரட்டையர் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், குணால் விசிராணி (மகாராஷ்டிரா) & பஜ்வால் தேவ் (கர்நாடகா) அணி 6-3,6-2 என்ற செட் கணக்கில் தமிழக அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

பெண்கள் இரட்டையர் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், சுவேதா (டெல்லி) மற்றும் நிதி (ஆந்திரா) ஆகியோர் அடங்கிய அணி, சாய் அவந்திகா (தமிழ்நாடு), அனுஷா (ஆந்திரா) அணியை 6-4,6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. வெற்றி பெற்ற அணிகள் இறுதி போட்டிக்கு தகு பெற்றுள்ளன.

Newsletter