உடுமலையில் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி தொடக்கம் : சுமார் 290 வீரர்கள் பங்கேற்பு

திருப்பூர் : உடுமலையில் இன்று தொடங்கிய மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 290 வீரர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் : à®‰à®Ÿà¯à®®à®²à¯ˆà®¯à®¿à®²à¯ இன்று தொடங்கிய மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 290 வீரர்கள் கலந்து கொண்டனர். 



உடுமலையில் சங்கா் அறக்கட்டளை மற்றும் திருப்பூர் மாவட்ட பளுதூக்கும் சங்கம் இணைந்து மாநில அளவிலான பளுதூக்கும் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

இன்று முதல் 2 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் 19 வயது முதல் 23 வயது வரையிலான வீரா்களுக்கு, அவர்களின் உடல் எடைக்கு தகுந்தவாறு 53, 59, 66, 74 என 12 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 290 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.



போட்டியின் இறுதியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவில் நடைபெறும் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். 

நாளை பள்ளி மாணவர்களுக்கான பளுதூக்கும் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அதிகளவில் கலந்து கொள்ள உள்ளனா்.

Newsletter