ஏ.ஐ.டி.ஏ டென்னிஸ் போட்டிகள்: கர்நாடக வீரர் வெற்றி

கோவை: கேஜி ரமேஷ் டென்னிஸ் அகாடமியில் நடைபெற்ற ரோட்டரி ஷார்ப் ஏ.ஐ.டி.ஏ நடத்திய டென்னிஸ் போட்டிகளில் கர்நாடக வீரர் பிரஜ்வால் தேவ் வெற்றி பெற்றுள்ளார்.

கோவை: à®•ேஜி ரமேஷ் டென்னிஸ் அகாடமியில் நடைபெற்ற ரோட்டரி ஷார்ப் ஏ.ஐ.டி.ஏ நடத்திய டென்னிஸ் போட்டிகளில் கர்நாடக வீரர் பிரஜ்வால் தேவ் வெற்றி பெற்றுள்ளார்.

ஆண்கள் பிரிவின் இறுதி போட்டியில் பிரஜ்வால் மற்றும் இஷாக் இக்பால் மோதினர். இதில், இஷாக் இக்பாலுக்கு வயிறு பகுதியில் காயம் ஏற்பட்டது. இது எதிராக விளையாடிய வீரருக்கு சாதகமாக அமைந்தது. தொடர்ந்து, இரண்டு செட் (6-0, 1-0) கணக்கிலும், பிரஜ்வால் தேவ் முன்னிலை வகித்து வெற்றி வாகை சூடினார்.



பெண்களுக்கான இறுதி போட்டியில், டெல்லியை சேர்ந்த ரிஷிகா சுன்கரா மற்றும் ஸ்வேதா ரான மோதினர். இதில், (6-2, 6-3) இரண்டு செட்களிலும் ரிஷிகா சுன்கரா முன்னிலை வகித்து வெற்றி பெற்றார்.



வெற்றி பெற்றவர்களுக்கு ஷார்ப் டூல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பாண்டியன் ரூ.2. லட்சம் மதிப்பிலான ரொக்க பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினார்.

Newsletter