தமிழகத்தில் முதல்முறையாக குழந்தைகளுக்கான கால்பந்து போட்டி கோவையில் அறிமுகம்

கோவை : தமிழகத்தில் முதல்முறையாக குழந்தைகளுக்கான கால்பந்து போட்டித் தொடரை 'ஃபர்ஸ்ட் கிக்` சார்பில் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


கோவை : தமிழகத்தில் முதல்முறையாக குழந்தைகளுக்கான கால்பந்து போட்டித் தொடரை 'ஃபர்ஸ்ட் கிக்` சார்பில் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 



அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுவரை 5 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கான கால்பந்து போட்டி 3 சீசன்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், குழந்தைகள் இடையே விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் முதல்முறையாக குழந்தைகளுக்கான கால்பந்து போட்டித் தொடரை 'ஃபர்ஸ்ட் கிக்` சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. 8 மற்றும் 10 வயதுக்குட்பட்டவர்கள் என இருபிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. 



8 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் 12 அணிகளும், 10 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் 3 பெண் குழந்தைகள் அணி உள்பட 17 அணிகளும் இடம்பெற்றுள்ளன. மேலும், அனைத்து அணிகளிலும் 10 சதவீதம் சிறுமிகளும் இடம்பெற்றுள்ளனர். 



கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டித் தொடரை வருமான வரித்துறை உதவி ஆணையர் ஆர் ரகுபதி தொடங்கி வைத்தார். தொடக்கப் போட்டியில் தசரதன் இன்டர்நேசனல் பள்ளி மற்றும் ரெட் ஈகிள்ஸ் பள்ளிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், ரெட் ஈகிள்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Newsletter