மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் ஸ்டெயின் ஏஞ்சலோ இந்தியன் பள்ளியைச் சேர்ந்த மாணவர் சாம்பியன்

கோவை : மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் ஸ்டெயின் ஏஞ்சலோ இந்தியன் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஆர். ஹரிஹரன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.


கோவை : மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் ஸ்டெயின் ஏஞ்சலோ இந்தியன் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஆர். ஹரிஹரன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

தமிழக விளையாட்டு மேம்பாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்டு வரும் கேரம் போட்டி, நேரு மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள 12-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 27 மாணவிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்கள், மாணவிகளுக்கென 5-ம் வகுப்பிற்குட்டப்பட்டவர்கள் மற்றும் 6 முதல் 12-ம் வகுப்பினருக்கு என இருபிரிவுகளின் கீழ் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், 5-ம் வகுப்பிற்குட்டவர்களுக்கான மாணவர்கள் பிரிவில் ஸ்டெயின் ஏஞ்சலோ இந்தியன் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஆர். ஹரிஹரன் முதலிடம் பிடித்தார்.



இதேபோல, 6 முதல் 12-ம் வகுப்பினருக்குக்கான பிரிவில் மணி உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஆர். சந்திப் சாம்பியன் பட்டம் வென்றார். மாணவர்கள் இரட்டையர் பிரிவில் வாஷவி வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த பவனேஷ் கமார் மற்றும் யெஷ்வந்த்தும், மாணவிகள் இரட்டையர் பிரிவில் வாஷவி வித்யாலயாவின் ஹரிபிரியா மற்றும் ஜன ரஞ்சனி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.



இதில், வெற்றி பெற்றவர்கள் தமிழக விளையாட்டு மேம்பாட்டுக் கழகத்தினால் நடத்தப்படும் மாநில அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்க உள்ளனர். 

Newsletter