வாய் புற்றுநோய் குறித்து கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

கோவை: வாய் புற்றுநோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோவை: வாய் புற்றுநோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு மேக்சியோபேசியல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் இந்த பேரணி நடைபெற்றது. நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கிய இந்த பேரணியில் 750-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியை மேற்குமண்டல காவல்துறை தலைவர் பாரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



6 வயது குழந்தைகள் முதல் 90 வயது வரையிலான முதியவர்கள் வரை இந்த பேரணியில் கலந்து கொண்டு 5 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டனர்.



புகைபிடிப்பதாலும், குட்கா, பான் மசாலா சுவைப்பதாலும் ஏற்படும் தீமைகள் குறித்தும், இந்தியாவில் மூன்றில் ஒரு சதவீத புற்றுநோயாளிகள் வாய் புற்றுநோயால் பதிக்கப்பட்டது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



Newsletter