பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான கைப்பந்து போட்டி நீலகிரியில் தொடக்கம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஆங்கில பள்ளிகளுக்கிடையேயான தேசிய அளவிலான கைப்பந்து போட்டி புனித ஜூட்ஸ் பள்ளியில் இன்று தொடங்கியது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஆங்கில பள்ளிகளுக்கிடையேயான தேசிய அளவிலான கைப்பந்து போட்டி புனித ஜூட்ஸ் பள்ளியில் இன்று தொடங்கியது.

கோத்தகிரியிலுள்ள புனித ஜூட்ஸ் பள்ளியில் ஆங்கில பள்ளிகளுக்கிடையேயான தேசிய அளவிலான கைப்பந்து போட்டி இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இப்போட்டியை இந்திய ஆங்கில பள்ளிகளுக்கான கல்விக் கூட்டமைப்பின் சி.ஐ.எஸ்.சி.இ நிதித்துறை உதவி செயலாளர் அர்ஜித் பாசு மற்றும் டாக்டர்.சார்லஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இப்போட்டி தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஷ்கர் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 139 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர்.

ஜூனியர், சீனியர் என்ற அடிப்படையில் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெறுகிறது. வரும் சனிக்கிழமை இறுதி போட்டியுடன் நிறைவு பெறுகிறது.

Newsletter