அண்ணா பல்கலை.,யின் 10 வது மண்டல பேட்மிண்டன் போட்டிகள் கோவையில் தொடக்கம்

கோவை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கான ஜோன் 10 பேட்மிண்டன் போட்டிகள் கோவையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் நேற்று தொடங்கியது.


கோவை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கான ஜோன் 10 பேட்மிண்டன் போட்டிகள் கோவையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் நேற்று தொடங்கியது.

இரண்டு நாட்கள் நடைபெற்றும் இந்த போட்டியில் 27 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இறுதி போட்டிகள் இன்று கிருஷ்ணா கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.



முதல் நாளில், ஆண்களுக்கான போட்டியில், ஹிந்துஸ்தான் மற்றும் எஸ்.வி.எஸ் கல்லூரிகள் அதிக புள்ளிகளுடன் உள்ளன. பெண்களுக்கான போட்டிகளில் ராமகிருஷ்ணா, எஸ்.வி.எஸ், ஜெ.சி.டி ஆகிய கல்லூரிகள் முதல் போட்டியில் வெற்றி பெற்றன.

இந்த போட்டிகளை, கிருஷ்ணா கல்லூரியின் முதல்வர் ஜென்னட் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Newsletter