கோவையில் 4-வது பிரதர்ஃகூட் டிராபிக்கான கால்பந்து மற்றும் கபடி போட்டிகள் தொடக்கம்

கோவை : இரண்டு நாட்கள் நடக்கும் 4-வது பிரதர்ஃகூட் டிராபிக்கான கால்பந்து மற்றும் கபடி போட்டிகள் இன்று தொடங்கியது.

கோவை : à®‡à®°à®£à¯à®Ÿà¯ நாட்கள் நடக்கும் 4-வது பிரதர்ஃகூட் டிராபிக்கான கால்பந்து மற்றும் கபடி போட்டிகள் இன்று தொடங்கியது. 



இந்திய இஸ்லாமிய மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்த டிரேக் ஃபோர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் பார்க் கல்வி குழுமமும் இணைந்து பிரதர்ஹுட் டிராபிக்கான கால்பந்து மற்றும் கபடி போட்டித் தொடருக்கு ஏற்பாடு செய்தன. கரும்புக்கடையில் உள்ள இஸ்லாமிய உயர்நிலைப் பள்ளியில் இன்று முதல் 2 நாட்கள் நடக்கும் இந்த விளையாட்டுப் போட்டிகளில், பல்வேறு மாநிலங்களில் இருந்து கால்பந்து தொடரில் 46 அணிகளும், கபடிப் போட்டியில் 8 அணிகளும் கலந்து கொண்டுள்ளன. 



கால்பந்து மற்றும் கபடிப் போட்டிகளில் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் நாளை நடக்கும் வகையில் போட்டிகள் அட்டவணை செய்யப்பட்டுள்ளன. நாளை நடக்கும் பரிசளிப்பு விழாவில் கோவை மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித்குமார் மற்றும் அனுஷா ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.


Newsletter