ஆசிய சாம்பியன்ஷிப் சிலம்பம் போட்டியில் கோவை மாணவி 4 பதக்கங்கள் குவித்து சாதனை

கோவை : மலேசியாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் சிலம்பம் போட்டியில் கோவையைச் சேர்ந்த நிவேதா ஆர் பெரியசாமி தங்கம் உள்பட 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

கோவை : மலேசியாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் சிலம்பம் போட்டியில் கோவையைச் சேர்ந்த நிவேதா ஆர் பெரியசாமி தங்கம் உள்பட 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். 



ஆசிய கண்டத்தில் உள்ள இந்தியா, மலேசியா, இலங்கை, சீனா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர், வீரர்கள் கலந்து கொண்ட சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றன. இந்தியாவின் சார்பில் கோவையைச் சேர்ந்த நிவேதா, சுதர்சன் ஆகியோர் பங்கேற்றனர். இதில், பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம். (சி.எஸ்) படிப்பை படித்து வரும் நிவேதா ஆர் பெரியசாமி, 2 தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.



"அங்கப்பா சிலம்பம் கூடத்தில் முறைப்படி சிலம்பம் பயின்ற அவர், முதலில் பெற்றோர்களின் விருப்பத்திற்காகவே இக்கலையைக் கற்றார். பின்னர், நாளடைவில், அவருக்கு இந்தக் கலை மீது அதிக நாட்டம் ஏற்பட்டது. நிவேதா வெறும் சிலம்பம் மட்டும் கற்றுக்கொள்ளவில்லை. கராத்தே, குத்துச்சண்டை, வில்வித்தை உள்ளிட்ட கலைகளையும் நன்கு கற்று தேர்ந்துள்ளார்," என்கிறார் அவரது பயிற்சியாளர் துரோணாச்சாரியர் டி.ஏ., அங்கப்பா.

பதக்கங்கள் வென்று குறித்து வீராங்கனை நிவேதா ஆர் பெரியசாமி கூறியதாவது :- இது எனக்கு சர்வதேச அளவிலான முதல் போட்டித் தொடர். முதல் போட்டித் தொடரிலேயே பதக்கங்கள் வென்று சாதனை படைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதனை சிறந்த தருணமாக உணருகிறேன். வார்த்தைகளால் கூற முடியாது. கையில் தேசிய கொடியுடன், சர்வதேச களத்தில் பதக்கங்களைப் பெறும் எந்தவொரு வீரருக்கும் பெருமையாக இருக்கும். அதேவேளையில், எனது ஆதரவு கொடுத்த பயிற்சியாளர் டி.ஏ. அங்கப்பன் மற்றும் கெபிராஜ் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter