சி.பி.எஸ்.சி. பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டிகள் : கோவை, சென்னை அணிகள் சாம்பியன்

கோவை : சி.பி.எஸ்.சி. பள்ளிகளுக்கு இடையே தென்மண்டல அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை மற்றும் கோவை அணிகள் சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை : à®šà®¿.பி.எஸ்.சி. பள்ளிகளுக்கு இடையே தென்மண்டல அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை மற்றும் கோவை அணிகள் சாம்பியன் பட்டம் வென்றது. 



மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லாரில் சி.பி.எஸ்.சி. பள்ளிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டிகள் கடந்த 27-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தன. தென்மண்டல அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 50 பள்ளிகளில் இருந்து சுமார் 1,500 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். 

நாக் – அவுட் மற்றும் லீக் முறையில் மாணவர் மற்றும் மாணவியருக்கான 48 போட்டிகள் நடைபெற்றன. இன்று நடைபெற்ற இறுதிச் சுற்று ஆட்டத்தில் 19 வயதிற்கு உட்பட்ட மாணவியருக்கான பிரிவில் சென்னை வேலம்மாள் பள்ளி வெற்றி பெற்றது. 17-வயதுக்குட்பட்டோருக்கான மாணவர் பிரிவு இறுதி போட்டியில் கோவை கல்லார் சச்சிதானந்தா ஜோதி நிக்கேதன் பள்ளி வெற்றி பெற்றது. 



19-வயது பிரிவில் மாணவர்களுக்கு இடையிலான போட்டியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சைனிக் பள்ளி வெற்றி பெற்றது. அதேபோல, மாணவியருக்கான 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் கோவை கல்லார் சச்சிதானந்தா ஜோதி நிக்கேதன் பள்ளி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு சி.பி.எஸ்.சி. பள்ளிகளின் கண்காணிப்பாளர் கெளதம் மற்றும் கவிஞர் கவிதாசன் ஆகியோர் கோப்பைகளையும், பரிசுகளையும் வெற்றி பெற்ற அணிகளுக்கு வழங்கிப் பாராட்டினர். 

Newsletter