பாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி : பி.எஸ்.ஜி. கல்லூரி அணி மீண்டும் சாம்பியன்

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு இடையிலான கால்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி. கல்லூரி அணி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு இடையிலான கால்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி. கல்லூரி அணி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 

பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பிடித்த கல்லூரி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில், இறு ஆட்டத்தில் ஆக்ரோஷமாக ஆடிய பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஸ்ரீ நாராயணகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை எளிதில் தோற்கடித்தது. 



இதன்மூலம், தொடர்ச்சியாக 2-வது முறையாக பாரதியார் பல்கலைக்கழகத்தின் கோப்பையை பி.எஸ்.ஜி. அணி தட்டிச் சென்றது. 2-வது இடத்தை கூடலூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், 3-வது மற்றும் 4-வது இடங்களை முறையே வி.எல்.பி. கல்லூரி அணியும், ஸ்ரீ நாராயணகுரு கல்லூரி அணியும் பிடித்தன. 

வெற்றி பெற்ற அணிகளுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் கே. வடிவேலு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

Newsletter