கோவையில் அண்ணா பிறந்தநாள் நினைவு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி

கோவை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் நினைவு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடைபெற்றது.


கோவை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் நினைவு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடைபெற்றது.

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் நினைவு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் இன்று கோவை ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் (காஸ்மோபாலிடன் கிளப் முன்பு) நடைபெற்றது. இதனை கோவை மாநகர காவல் துறை, துணை ஆணையாளர் (போக்குவரத்து) சுஜித் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவிற்கு கோவை, ஏரோ டிரேடிங் நிறுவனத்தின், மேலாண்மை இயக்குனர் ஏ. எஸ். பகுத்தறிவு மோகன் அவர்கள் தலைமை தாங்கினார். கோவை மாவட்ட சைக்கிள் சங்கத்தின் செயலாளர் ஜே. கிருஷ்ண மூர்த்தி முன்னிலை வகித்தார். 



இந்த சைக்கிள் போட்டியில் கோவை மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகளிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில், மாணவர்கள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 11 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 2.5 கி.மீ தூரமும், 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 5 கி.மீ தூரமும், 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 7.5 கி.மீ தூரமும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 12.5 கி.மீ தூரமும் போட்டிகள் நடத்தப்பட்டன.



மாணவியர்களுக்கு 11 மற்றும் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் தனித்தனியாக இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு, இவர்களுக்கு 2.5 கி.மீ தூரமும், 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் தனித்தனியாக இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு இவர்களுக்கு 5 கி.மீ தூரமும் போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1,000 மற்றும் பதக்கமும், இரண்டாவது பரிசாக ரூ. 750 மற்றும் பதக்கமும், மூன்றாவது பரிசாக ரூ. 500 மற்றும் பதக்கமும் வழங்கப்பட்டது. 

Newsletter