அண்ணா பல்கலை., ஜோன்-10 போட்டிகள்: கபடியில் வென்றது நேரு கல்லூரி

கோவை: அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஜோன் -10 கபடி போட்டியில் நேரு தொழில்நுட்ப கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது.

கோவை: அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஜோன் -10 கபடி போட்டியில் நேரு தொழில்நுட்ப கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது.



இந்த போட்டிகளை ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரி ஒருங்கிணைத்துள்ளது. நேற்று நடைபெற்ற கபடி போட்டியில், 20க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இதன் இறுதி போட்டியில் ரத்தினம் கல்லூரியை 42-க்கு 29 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் நேரு கல்லூரி வெற்றி பெற்றது.



வெற்றி பெற்ற அணிகளுக்கு ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் லட்சுமி, குமரகுரு கல்லூரியின் உடற்கல்வி துறை இயக்குனர் மாரிசெல்வம் ஆகியோர் கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்கினர்.



Newsletter