நீலகிரியில் இளையோர் கால்பந்து போட்டி : விஷ்வா சாந்தி பள்ளி அணி சாம்பியன்

நீலகிரி : கோத்தகிரியில் லோட்டஸ் கால்பந்து அகாடமி சார்பில் இளையோர் கால்பந்து போட்டியில் விஷ்வா சாந்தி பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

நீலகிரி : கோத்தகிரியில் லோட்டஸ் கால்பந்து அகாடமி சார்பில் இளையோர் கால்பந்து போட்டியில் விஷ்வா சாந்தி பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.



கோத்தகிரியில் லோட்டஸ் கால்பந்து அகாடமி சார்பில் இளையோர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பெங்களூர், கேரளா, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இத்தொடரின் இறுதிப் போட்டியில் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் சத்திகாத்தி பள்ளியும், ட்ரீம்ஸ்சாகர் குன்னூர் அணிகள் மோதின. இதில், சத்திகாத்திபள்ளி 2-3 என்ற கோல் கணக்கில் ட்ரீம்ஸ் சாகர் பள்ளி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதேபோல, 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் விஷ்வா சாந்தி பள்ளி அணி, மகாத்மா காந்தி பள்ளியை வீழ்த்தி சாம்பியனானது. 14 வயதுக்குட்பட்ட போட்டியில் விஸ்வசாந்தி பள்ளியும் ரிவர்சைடு பள்ளியும் மோதின. இதில், விஸ்வசாந்தி பள்ளி இரண்டு கோல் அடித்து வெற்றி பெற்றது. 

வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்திரா பரிசுளை ள்வழங்கி பாராட்டினார். மேலும், சிறப்பு விருந்தினராக சத்தியகாத்தி பள்ளி தாளாளர் நஞ்சுண்டன் போஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Newsletter