பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி : ஸ்ரீ ஜெயந்திரா சரஸ்வதி வித்யாலயா பள்ளி இமாலய வெற்றி

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா அணி இமாலய வெற்றி பெற்றது.

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா அணி இமாலய வெற்றி பெற்றது. 

கோவை யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 டிராபிக்கான பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில், ஸ்ரீ ஜெயந்திரா சரஸ்வதி வித்யாலயா பள்ளி, பாரதி மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியை எதிர்கொண்டு விளையாடியது. முதலில் பேட் செய்த ஸ்ரீ ஜெயந்திரா சரஸ்வதி வித்யாலயா பள்ளி அணி என்.டி. ஹரி சங்கர் 158 ரன்களும், டி. அசோக் 105 ரன்களும் விளாசியதால், 25 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் குவித்தது. 

இதைத் தொடர்ந்து, இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பாரதி மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி அணி, எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். இதனால், 15 ஓவர்கள் முடிவில் அந்த அணி வெறும் 21 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து படுதோல்வியடைந்தது. 

மற்றொரு போட்டியில், ஸ்டேன்ஸ் ஏஞ்சலோ இந்தியன் உயர்நிலைப் பள்ளி 20.5 ஓவர்களில் 119 ரன்கள் எடுத்தது. பின்னர், விளையாடிய தேசிய மாடல் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி 24 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்ரீ சக்தி கல்லூரியில் நடந்த போட்டியில் டி.கே.எஸ். மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி அணி, டி.ஏ. ராமலிங்க செட்டியார் உயர்நிலைப் பள்ளியிடம் தோல்வியடைந்தது. 

Newsletter