துணிவு சாகசம் செய்த பெண்களுக்கு ‘கல்பனா சாவ்லா' விருது... விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..!

கோவை: ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின்போது வீர தீர செயல்களில் சாதனை செய்த பெண்களுக்கு ‘கல்பனா சாவ்லா' விருது வழங்கப்படுவது உண்டு. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.



கோவை: ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின்போது வீர தீர செயல்களில் சாதனை செய்த பெண்களுக்கு ‘கல்பனா சாவ்லா' விருது வழங்கப்படுவது உண்டு. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு சுதந்திர தின விழாவிலும் துணிவு மற்றும் சாகச வீரதீர செயல்கள் செய்த பெண்களுக்கு தமிழக முதல்வரால் ‘கல்பனா சாவ்லா' விருதுகள் வழங்கப்படும். அதற்காக தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. ‘கல்பனா சாவ்லா' விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான ‘கல்பனா சாவ்லா விருது' ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தின விழாவில் முதல்வரால் வழங்கப்படும். விருதாளருக்கு ஒ௫ லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு பதக்கம் வழங்கப்படும். தமிழகத்தைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே, இவ்விருது பெற தகுதியானவர். இந்த ஆண்டு வழங்க உள்ள விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விரிவான தன் விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் வழியாகவோ அல்லது awards.tn.gov.in என்ற இணையதளம் வழியாகவோ, ‘அரசுச் செயலர், பொதுத்துறை, தலைமை செயலகம், சென்னை - 600 009' என்ற முகவரிக்கு, வரும் 30ஆம் தேதிக்கு முன், அனுப்பி வைக்க வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். விருது பெற தகுதி உள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படுவார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...