கோவை வஉசி மைதானத்தில் போராட்டக்காரர்களுக்கு வசதியாக துப்புரவு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டினை நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் எவ்வித அரசியல் கட்சிகளின் ஈடுபாடுமின்றி தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒருவாரகாலமாக நடைபெற்று வரும் இப்போராட்டத்திற்கு பொதுமக்கள், தன்னார்வலர்கள், தனியார் நிறுவனத்தினர் என பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை, வஉசி மைதானத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீங்க வேண்டும். பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இரவு பகலாக வலியுறுத்தி வருகின்றனர்.



இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளதால் அவர்களுக்கான உணவுகள், தண்ணீர்கள் உள்ளிட்டவை பல அமைப்பினரால் நாள் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால், அப்பகுதியில் ஏற்படும் குப்பைகளை அகற்றவும், போராட்டத்தில் பெண்களும் ஈடுபட்டுள்ளதால் அவர்களுக்கான கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திடும் வகையிலும் கோவை மாநகராட்சியின் சார்பில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்று வஉசி மைதானத்தில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் இணைந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்நிகழ்வின் போது க.விஜயகார்த்திகேயன் உடன் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...