பிப்ரவரி மாதத்தில் வாழைக்கு நல்ல விலை கிடைக்கும் என வேளாண் பல்கலை தகவல்


வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் மூன்றாம் முன்கூட்டிய மதிப்பீட்டின் படி, வாழை சாகுபடி 2015- 16 ஆம் ஆண்டு, இந்தியாவில் 0.84 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 29.12 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது.

கர்நாடகா, தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவை வாழை உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களாகும்.

தமிழ்நாட்டில் கோவை, தேனி, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகியவை வாழை பயிரிடப்படும் முக்கிய மாவட்டங்களாகும். இதில் திருச்சி, திருநெல்வேலி, கடலூர், தேனி மற்றும் கோவை ஆகியவை வாழை விற்பனை செய்யும் முக்கிய மாவட்டங்களாகும்.

இவற்றுள் திருச்சி வாழைக்கு முக்கிய சந்தையாகும். திருச்சியிலிருந்து வாழை, மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது லால்குடி, புதுக்கோட்டை, முசிறி மற்றும் தேனி ஆகிய பகுதிகளில் இருந்து வாழையின் வரத்து திருச்சி சந்தைக்கு அதிகளவில் உள்ளது.

வர்த்தக மூலங்களின் படி, பண்டிகை காலங்களில் வாழைக்கு அதிக தேவை இருப்பதால் விலை அதிகரிக்கும். இந்த ஆண்டில், குறைவான மழையின் காரணமாக உற்பத்தி குறைந்துள்ளதால் தேவைக்கு ஏற்ப வாழையின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கடந்த 15 ஆண்டுகளாக கோவை சந்தையில் நிலவிய பூவன் மற்றும் கற்பூரவள்ளி வாழை ரகங்களின் விலை நிலவரங்களையும், 10 ஆண்டுகள் நிலவிய நேந்திரன் வாழை நிலவரத்தையும் ஆய்வு செய்தது.

ஆய்வு முடிவின் அடிப்படையில், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பூவன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு விலை ரூ.13 முதல் 15, கற்பூரவள்ளி ரூ.18 முதல் 20 மற்றும் நேந்திரன் வாழையின் பண்ணை விலை கிலோவிற்கு ரூ.36 முதல் 38 வரை இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

இதுகுறித்தான மேலும் விவரங்களுக்கு உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை - 641 003 அல்லது 0422-2431405 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயனடையலாம்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...