ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி: பன்னாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதித்த விஎல்பி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம்

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையினை நீக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஒரு பகுதியாக, பன்னாட்டு குளிர்பானமான கொக்ககோலா, பெப்சி உள்ளிட்ட பானங்களை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் தடைசெய்ய வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து, பல வனிகர்களும் மாணவர்களின் விழிப்புணர்வுக்கு ஆதரவு தெரிவித்து இனி தங்களது வனிகவளாகத்தில், உணவு விடுதியில் இதுபோன்ற பன்னாட்டு குளிர்பானங்களை விற்பதை தடைசெய்வதாகவும், இளநீர் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரியமான பானங்களை விற்பனை செய்யப்போவதாகவும் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் செயல்பட்டு வரும் விஎல்வி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகம் தற்போது தங்களது உணவு விடுதியில் பன்னாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதித்து அறிவித்துள்ளது.

மேலும், கொக்ககோலா, பெப்சி மற்றும் அந்நிறுவனத்தின் குடிநீர் பாட்டில்கள் கூட விற்பனை செய்யப்பட மாட்டாது. மேலும், எலுமிச்சை, ஆரஞ்சு பழச்சாறு, மற்றும் பல பாரம்பரியமான பானங்களை விற்க முடிவெடுத்துள்ளதாக அக்கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், இதேப்போன்று ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமமும் இனி வரும் காலங்களில் தங்களது கல்வி நிறுவனங்களில் பெப்சி, கொக்க கோலா உள்ளிட்ட பன்னாட்டு பானங்களை தடை செய்வதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...