கோவையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு புகழாரம்!


கோவை சிவானந்தா காலனியில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது மொழிப்போர் தியாகிகளை நினைவு கூர்ந்தார். பின்னர் பேசிய அவர் கடந்த ஒரு வாரகாலமாக தமிழ்மொழியின் கலாச்சாரம், பண்பாட்டை காக்க ஜல்லிகட்டை முன்வைத்து மிகப்பெரிய போராட்டத்தை மாணவர்கள் நடத்தி வெற்றி கண்டிருக்கின்றனர் எனவும் போராட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்.



தமிழகம் முழுவதும் போராட்டத்தில் கலந்து கொண்ட கர்பிணிகள், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் காவல் துறையால் தாக்கப்பட்டனர் எனவும் கோரிக்கை வெற்றி பெற்ற நிலையில் மாணவர் போராட்டத்தில் தடியடி நடத்த வேண்டிய அவசியம் என்ன எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

மாணவர்கள் அறவழி போராட்டத்திற்கு முதல்வர் பன்னீர் செல்வம் பாரட்டு தெரிவித்த பின்னரே மாணவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது எனவும் வாகனங்களுக்கும், குடிசைகளுக்கும் போலிசாரே தீ வைக்கும் வாட்ஸ் அப் காட்சிகளை பார்த்த தமிழக ஆளுநர் அதிர்ச்சி அடைந்தார் எனவும் தெரிவித்த அவர், மாணவர் மீதான தாக்குதலில் போலிசார் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது தமிழ் மொழி காப்பாற்றப்பட்டது எனவும் 2017 தமிழ் இளைஞர்களால் தமிழ் பண்பாடு காப்பாற்றப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.



மாணவர் போராட்டத்தை தொடந்து உடனடியாக அவசர சட்டம் கொண்டு வந்த அதிமுக அரசு, இதை ஏன் கடந்த மூன்றாண்டுகளாக செய்யாமல் இருந்தது எனவும் கேள்வி எழுப்பினார். கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்திருந்தால் மாணவர்கள் போராடும் நிலை நிச்சயமாக வந்திருக்காது எனவும் தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சியால் எந்த காலத்திலும் தமிழகத்தில் காலுன்ற முடியாது என்பதால் திமுகவை விமர்சனம் செய்கின்றது எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவை அருகே சிறுவாணி, பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். மத்தியில் இருக்கும் ஆட்சிக்கு துணையாக மாநிலத்தில் இருக்கும் ஆட்சியும் அமைந்துள்ளது எனவும் ஏற்கனவே கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் சீரழிந்துவிட்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவையில் கடந்த 2014ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தின் போது தமிழ் மொழி மத்திய ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்படிருந்தது எனவும்  கலைஞர் காலத்திலேயே தமிழ் மொழி மத்திய ஆட்சி மொழியாக வர வாய்ப்பிருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

மேலும் ஜல்லிகட்டு போராட்டம் நினைவாக  காளையின் சின்னத்தை மெரினாவில் வைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும், இளைஞர்களும் தன்னிடம் வலியுறுத்தியதாகவும், எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் அரசிடம் வலியுறுத்த போவதாகவும், நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், விரைவில் திமுக ஆட்சி அமையும் போது ஜல்லிகட்டு போராட்டம் நினைவுவாக காளை சின்னம் மெரினாவில் அமைக்கப்படும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். இந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...