வால்பாறையை அடுத்துள்ள வரட்டுப்பாறை எஸ்டேட்டில் யானைகள் அட்டகாசம்

வால்பாறையை அடுத்துள்ள வரட்டுப்பாறை எஸ்டேட்டில் நேற்று நள்ளிரவில் 5 காட்டு யானைகள் அப்பகுதியில் முகாமிட்டு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. 



இதில் அங்கு உம்மர் என்பவர் நடத்தி வந்த டீக்கடையை உடைத்த யானைகள் கடையில் இருந்த மாவுப் பொருட்கள், பிஸ்கட் போன்ற தின்பண்டங்களையும் சேதப்படுத்தியது. கடையின் கட்டிடமும் சேதமடைந்தது. 

இதே போல் அருகில் வசிக்கும் தேயிலை தோட்டத் தொழிலாளி அன்புச் செழியன் என்பவரது வீட்டின் ஓடுகளையும் காட்டு யானைகள் உடைத்தது. அதுமட்டுமல்லாமல் நிர்வாகத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள மாட்டுத் தொழுவத்தையும் உடைத்தது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் அச்சத்தில் ஆழ்ந்தனர். 

தொடர்ந்து பல எஸ்டேட் பகுதிகளிலும் யானைகள் இரவு நேரங்களில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. 

எனவே வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து யானைகள் முகாமிட்டுள்ள பகுதியை கண்டறிந்து யானைகளை காட்டுக்குள் விரட்டினால் பொருட்சேதம் மட்டுமல்லாமல் உயிர்ச்சேதத்தையும் தவிர்க்கலாம் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...