கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. 



கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளை எடுத்துரைத்து மனுக்களாக வழங்கினர். இதனைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். 

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டத்தில் பருவமழை பொய்த்துபோய் உள்ளதால் மாவட்டம் முழுவதிலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்க நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

அதற்காக மத்திய மற்றும் மாநில அளவில் உயர் கண்கெடுப்புகுழு பார்வையிட்டு சென்றுள்ளது. அனைவருக்குமான நிவாரணத்தொகை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் சராசரி மழை அளவாக  623.1 மி.மீ உள்ளது. டிசம்பர் 2016 மாதம் வரை 306.22 எம்.எம் வரப்பெற்றுள்ளது. இதில் ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி வட்டாரங்களில் அதிக மழை பொழிவு பெறப்பட்டுள்ளது. 

அணைகளின் நீர் மட்டம் சோலையார் அணையில் 3.38 அடியும், ஆழியார் அணையில் 57.20 அடியும், பரம்பிக்குளம் அணையில் 11.28 அடியும் நீர் இருப்பு உள்ளது. 

பயிர் சாகுபடி பரப்பு டிசம்பர் இதுவரை 70492 ஹெக்டேரில் ஒத்திசைவு செய்யப்பட்டுள்ளது. உணவு தானியங்கள் பரப்பளவு 26041 ஹெக்டர் ஆகும். இதில் சோளம் 20879 ஹெக்டேர், மக்காச்சோளம் 3870 ஹெக்டேர், பயிறு வகைகள் 6761 ஹெக்டேர், எண்ணெய் வித்துக்கள் 4177 ஹெக்டேர், மிளகாய், கத்தரி, வெங்காயம், தக்காளி ஆகிய காய்கறி பயிர்கள் 11135 ஹெக்டேர் அடங்கும்.

விவசாயிகளுக்கு விதை வினியோகம் செய்ய விதை இருப்பு நிலவரமானது நிலக்கடலை 4.080 மெ.ட, பாசிப்பயறு, துவரை, உளுந்து ஆகியவை 4.2010 டன்னும், மக்காச்சோளம், குதிரைவாலி, திணை உள்ளிட்டவை 0.4100 டன்னும் அரசு மற்றும் தனியார் விதை கிடங்குகளில் இருப்பு உள்ளது. இவற்றினை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம்.

மாவட்டத்தில் உரம் இருப்பு 8562 மெட்ரிக் டன் உள்ளது. யூரியா 2920 மெட்ரிக் டன், டிஏபி 1813 மெட்ரிக் டன், பொட்டாஷ் 2207  டன்னும் உள்ளது.

விவசாயிகளுக்கு இதுவரை தேசியமயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கி மூலம் 4699.88 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் து.வெங்கடேசன், வேளாண் இணை இயக்குநர் சந்திரசேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்ராஜ்சாமுவேல், வருவாய் கோட்டாட்சியர் எஸ்.மதுராந்தகி, அரசு அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...