கே.எம்.சி.எச்-ல் அதிநவீன ரோபோட்டிக் கருவி மூலம் பத்துவகையான அறுவை சிகிச்சை

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக ரோபோட்டிக் கருவியின் உதவியுடன் சிக்கலான இரைப்பை, சிறுநீரக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிநவீன டாவின்சி ரோபோட்டிக் இயந்திரத்தை பயன்படுத்தி செய்யும் அறுவை சிகிச்சை மிகசிறு துளையிட்டு, வலி குறைவாகவும், தழும்பு இல்லாமலும், நோயாளிகள் விரைவில் குணமடையும் விதமாகவும் மேற்கொள்ளப்படுகிறது. பெரிதாக்கப்பட்ட முப்பரிமாண காட்சியால், சிக்கலான புற்றுநோய்த் திசுக்களையும் மிகவும் துல்லியமாக பிற நற்திசுக்கள் பாதிக்காத வகையில் அகற்ற முடியும். 



54 வயது பெண்மணி உணவு உண்ண முடியாத நிலையில் மருத்துவர் கணேசனை வந்து சந்தித்தார். அவரை ஆய்வு செய்த மருத்துவர், மார்பு பகுதியில் உள்ள  உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தார். அவருக்கு புற்றுநோய் கட்டியை கரைக்க கீமோ கதிர்வீச்சு சிகிச்சை தரப்பட்டது. இந்த சிகிச்சை பலனளிக்கவில்லை. எனவே இரண்டு நாட்களுக்கு முன் அவருக்கு டாக்டர் கணேசன் ரோபோட்டிக் கருவியின் மூலம் உணவுக் குழாய்பகுதி அறுவை சிகிச்சையை மேற்கொண்டார் மற்றும் இரண்டு கோளவடிநீர் கட்டிகளையும் அகற்றினார். 

வழக்கமாக இந்தமுறையில் மார்பை திறந்து அறுவை சிகிச்சை மேற்கொள்வதை தவிர்த்து, அதிநவீன ரோபோட்டிக் இயந்திரத்தை பயன்படுத்தி மார்பு பகுதியில் நான்கு சிறியதுளையிட்டு துல்லியமாக இந்த சிகிச்சையை மேற்கொண்டார். இது போன்றே 3 மலக்குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை இந்த ரோபோடிக் கருவியின் உதவியுடன் மிகவும் துல்லியமாக மேற்கொண்டுள்ளார். இதனால், நிரந்தரமான மலக்குடல் நீக்கம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

டாவின்சி ரோபோட்டிக் அமைப்பை பயன்படுத்தி இவர் கே.எம்.சி.எச்-ல் இதுவரை 15 அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். ரோபோட்டிக் கருவியைபயன்படுத்தி கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் பத்துவகையானஅறுவை சிகிச்சை விபரங்கள்:

1) மார்பு பகுதி அறுவை சிகிச்சை

2) இரைப்பை 

3) ஹெல்லர்ஸ் எதுக்களிப்பு

4) டி2 இரைப்பை பகுதி

5) கணையத்தில் ஏற்படும் அழற்சி

6) மலக்குடல் புற்றுநோய்

7) ஆசனவாய் சிகிச்சைகள்

8) மலக்குடல் நீக்கத்தை தவிர்த்து புற்றுநோய் அறுவை சிகிச்சை

9) கருப்பைநீக்க அறுவை சிகிச்சை

10) உடல் பருமனை கட்டுப்படுத்தும் இரைப்பை அறுவை சிகிச்சை

கே.எம்.சி.எச் ரேபோட்டிக்  அறுவை சிகிச்சை மருத்துவக் குழுவில், டாக்டர் கணேசன் பொது அறுவை சிகிச்சை மருத்துவர், சிறுநீரகம் மற்றும் பொது அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் குப்புராஜன், மற்றும் டாக்டர் ஆனந்தன், பொது அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர். ராஜ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கே.எம்.சி.எச் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி கூறுகையில், “ரோபோட்டிக் சிஸ்டத்தை பயன்படுத்தி டாக்டர் கணேசன் மேற்கொண்ட அறுவை சிகிச்சை, கோவையில் முதல் முறையானது. டாக்டர் கணேசனின் இந்த அருமையான துல்லியமான சிகிச்சை பாராட்டுக்குரியது. கேஎம்சிஎச் -ல், மேற்கொள்ளப்படும் இந்த அறுவை சிகிச்சைக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் கிடையாது என்பது, மக்களிடையே நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 50 நாட்களில் கேஎம்சிஎச்-ல் ரோபோடிக் மருத்துவ குழுவின் உதவியால் 35 ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்றார்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...