கே.எம்.சி.எச்-ல் அதிநவீன ரோபோட்டிக் கருவி மூலம் பத்துவகையான அறுவை சிகிச்சை

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக ரோபோட்டிக் கருவியின் உதவியுடன் சிக்கலான இரைப்பை, சிறுநீரக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிநவீன டாவின்சி ரோபோட்டிக் இயந்திரத்தை பயன்படுத்தி செய்யும் அறுவை சிகிச்சை மிகசிறு துளையிட்டு, வலி குறைவாகவும், தழும்பு இல்லாமலும், நோயாளிகள் விரைவில் குணமடையும் விதமாகவும் மேற்கொள்ளப்படுகிறது. பெரிதாக்கப்பட்ட முப்பரிமாண காட்சியால், சிக்கலான புற்றுநோய்த் திசுக்களையும் மிகவும் துல்லியமாக பிற நற்திசுக்கள் பாதிக்காத வகையில் அகற்ற முடியும். 



54 வயது பெண்மணி உணவு உண்ண முடியாத நிலையில் மருத்துவர் கணேசனை வந்து சந்தித்தார். அவரை ஆய்வு செய்த மருத்துவர், மார்பு பகுதியில் உள்ள  உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தார். அவருக்கு புற்றுநோய் கட்டியை கரைக்க கீமோ கதிர்வீச்சு சிகிச்சை தரப்பட்டது. இந்த சிகிச்சை பலனளிக்கவில்லை. எனவே இரண்டு நாட்களுக்கு முன் அவருக்கு டாக்டர் கணேசன் ரோபோட்டிக் கருவியின் மூலம் உணவுக் குழாய்பகுதி அறுவை சிகிச்சையை மேற்கொண்டார் மற்றும் இரண்டு கோளவடிநீர் கட்டிகளையும் அகற்றினார். 

வழக்கமாக இந்தமுறையில் மார்பை திறந்து அறுவை சிகிச்சை மேற்கொள்வதை தவிர்த்து, அதிநவீன ரோபோட்டிக் இயந்திரத்தை பயன்படுத்தி மார்பு பகுதியில் நான்கு சிறியதுளையிட்டு துல்லியமாக இந்த சிகிச்சையை மேற்கொண்டார். இது போன்றே 3 மலக்குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை இந்த ரோபோடிக் கருவியின் உதவியுடன் மிகவும் துல்லியமாக மேற்கொண்டுள்ளார். இதனால், நிரந்தரமான மலக்குடல் நீக்கம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

டாவின்சி ரோபோட்டிக் அமைப்பை பயன்படுத்தி இவர் கே.எம்.சி.எச்-ல் இதுவரை 15 அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். ரோபோட்டிக் கருவியைபயன்படுத்தி கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் பத்துவகையானஅறுவை சிகிச்சை விபரங்கள்:

1) மார்பு பகுதி அறுவை சிகிச்சை

2) இரைப்பை 

3) ஹெல்லர்ஸ் எதுக்களிப்பு

4) டி2 இரைப்பை பகுதி

5) கணையத்தில் ஏற்படும் அழற்சி

6) மலக்குடல் புற்றுநோய்

7) ஆசனவாய் சிகிச்சைகள்

8) மலக்குடல் நீக்கத்தை தவிர்த்து புற்றுநோய் அறுவை சிகிச்சை

9) கருப்பைநீக்க அறுவை சிகிச்சை

10) உடல் பருமனை கட்டுப்படுத்தும் இரைப்பை அறுவை சிகிச்சை

கே.எம்.சி.எச் ரேபோட்டிக்  அறுவை சிகிச்சை மருத்துவக் குழுவில், டாக்டர் கணேசன் பொது அறுவை சிகிச்சை மருத்துவர், சிறுநீரகம் மற்றும் பொது அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் குப்புராஜன், மற்றும் டாக்டர் ஆனந்தன், பொது அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர். ராஜ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கே.எம்.சி.எச் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி கூறுகையில், “ரோபோட்டிக் சிஸ்டத்தை பயன்படுத்தி டாக்டர் கணேசன் மேற்கொண்ட அறுவை சிகிச்சை, கோவையில் முதல் முறையானது. டாக்டர் கணேசனின் இந்த அருமையான துல்லியமான சிகிச்சை பாராட்டுக்குரியது. கேஎம்சிஎச் -ல், மேற்கொள்ளப்படும் இந்த அறுவை சிகிச்சைக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் கிடையாது என்பது, மக்களிடையே நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 50 நாட்களில் கேஎம்சிஎச்-ல் ரோபோடிக் மருத்துவ குழுவின் உதவியால் 35 ரோபோட்டிக் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்றார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...