கர்நாடகாவில் பாரம்பரிய விளையாட்டான கம்பலாவுக்கு குரல் கொடுத்து மாணவர்கள் போராட்டம்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போரட்டங்களில் இறங்கினர். தமிழகம் முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து, தமிழக சட்டப் பேரவையில் அவசர சட்டம் இயற்றப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மாணவர்களின் இந்த அறப்போராட்டத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தன. 

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்திம் பாரம்பரிய விளையாட்டான கம்பலாவுக்கு இருக்கும் தடையை நீக்க வலியுறுத்தி அம்மாநிலத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எருதுகள் பந்தையமான கம்பலா விளையாட்டில் எருதுகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா முறையீடு செய்த வழக்கில் அவ்விளையாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது.  தங்கள் பாரம்பரிய விளையாட்டுக்கு இருக்கும் தடையை நீக்க வேண்டும் என்று கர்நாடக மாணவர்கள் மற்றும் மக்கள் தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மேலும், கன்னட பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்திவருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா-வின் அரசு கம்பலா விளையாட்டுக்கு ஆதரவாக இருக்கிறது. இருந்த் போதும், உச்ச நீதிமன்றம் தடை வித்துள்ளதால் விளையாட்டை நடத்தமுடியாத சூழல் உருவாகியிருப்பதாக சித்தராமையா கூறியுள்ளார். மேலும், தேவைப்பட்டால் தமிழகம் போல கர்நாடகத்திலும் அவசரச்சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...