பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்ட முயற்சி : இரு மாநில எல்லைகளுக்கு சீல்!


பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுமான பணிகளை மேற்கொள்வதால் பல்வேறு கட்சியினர் கேரள எல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் தமிழக-கேரள எல்லை பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.



பவானி ஆற்றின் குறுக்கேதேக்குவட்டை, மஞ்சக்கண்டிஉள்ளிட்ட 6 இடங்களில் கேரளஅரசு தடுப்பணைகள் கட்டும்பணியில் ஈடுபட்டுள்ளது. தமிழகஅரசின் ஒப்பதல் இன்றி, கட்டுமானபணிகள் நடைபெறுவதை தடுத்தநிறுத்த வலியுறுத்தி தொடர்போராட்டங்கள் நடந்துவருகின்றன. இதன் ஒரு பகுதியாகபவானி ஆற்றில் தடுப்பணைகள்கட்டும் கேரள அரசை கண்டித்தும்,கட்டுமான பணிகளை மத்திய அரசுதடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தமிழக கேரள எல்லைப்பகுதியான கோவை மாவட்டம் ஆணைக்கட்டியில்அனைத்து கட்சிகள் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திமுக, தபெதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், விவசாய சங்கங்கள், வணிகர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். 



இதையடுத்து பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பகுதிகளுக்கு சென்று, கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த அனைத்து கட்சியினர் சென்றனர். கேரள மாநிலத்திற்குள் நுழைய முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் எனவும், இதனை தடுத்து நிறுத்த தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அரசு தடுப்பணைகள் கட்டுமான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டால், அம்மாநில எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.



இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டக்காரர்கள் கேரள மாநிலத்திற்குள் நுழைவதை தடுக்க நான்கு அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில எல்லைகளில் தண்ணீர் பீரங்கி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.  இதனால் கேரள மாநிலத்திற்கு செல்பவர்கள் மாற்று வழியில் சென்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...