கனடாவில் பணிபுரிந்து வந்த சகோதரரைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு


கனடாவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தனது சகோதரர் மாயமாகி விட்டதாகவும், இந்திய வெளியுறவுத் துறை மூலம் தனது சகோதரனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோவை சூலூர் பகுதியை சேர்ந்த அவரது தங்கை மற்றும் தந்தை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரோத்தாஸ் சிங் தாலா. டெல்லியை சேர்ந்த இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோவை மாவட்டம் சூலூரில் வசித்து வருகின்றார்.

இவரது இளைய மகன் கார்த்திக் சவுத்ரி (25) மும்பையை சேர்ந்த ஆங்கிலோ ஈஸ்டன் என்ற கப்பல் நிறுவனத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றார்.



இந்நிலையில் பணிநிமித்தமாக கனடா சென்ற கார்திக் சவுத்ரி மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. கடைசியாக டிசம்பர் மாதம் குடும்பத்தினருடன் பேசிய கார்த்திக் சவுத்ரி அதன் பின்னர் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவில்லை என கூறப்படுகின்றது.

இந்நிலையில், இன்று கார்த்திக் சவுத்ரியின் தந்தை ரோத்தாஸ் சிங் மற்றும் அவரது சகோதரி மீனாட்சி ஆகியோர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் தனது சகோதரனை இந்திய வெளியுறவுத்துறை மூலம் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கார்த்திக் சவுத்தியின் சகோதரி மீனாட்சி, தனது சகோதரன் மாயமானது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறைக்கு இ-மெயில் மூலம் புகார் அளித்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனமும் தனது சகோதரன் குறித்து உரிய தகவல் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், சகோதரன் பணிபுரிந்த நிறுவன ஊழியர்கள் திடீரென இறப்பு சான்றிதழ் தரும்படி கேட்பதாகவும் தெரிவித்த அவர், தனது சகோதரன் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை எனவும் எனவே கனடாவில் மாயமான தனது சகோதரனை இந்திய வெளியுறவுத்துறை மூலம் மீட்க மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...