மத்திய அரசு வழங்கி வரும் நிதி நின்று போக வாய்ப்பிருப்பதால் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்- கொ.ம.தே.க.ஈஸ்வரன்


உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கி வரும் நிதி நின்று போக வாய்ப்பிருப்பதால், உள்ளாட்சி தேர்தலை தமிழக தேர்தல் ஆணையம் விரைவாக நடத்த வேண்டுமென கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மாநகர பொதுக்குழு கூட்டம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவது தமிழகத்திற்கு எதிரானது என தெரிவித்தார். 

இதே போல மற்ற மாநிலங்கள் பாதிக்கும் வகையில் மாநில அரசுகள் தன்னிச்சையாக ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டுவதை தவிர்க்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டுமென வலியுறுத்தினார். 

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கும் மாணவர்களுக்கும் தொடர்பு இல்லை எனவும், அப்பாவி மாணவர்கள் மீது காவல் துறையினரால் பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். 

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் 3 ஆண்டுகள் கடந்தும் நதிகளை இணைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், நதிகளை இணைப்பது தொடர்பாக தமிழக பா.ஜ.க-வின் பதில் என்ன என கேள்வி எழுப்பினார். 

தேசிய நதிகளை இணைப்பதே நதிநீர் பிரச்சணைகளுக்கு நிரந்தர தீர்வாக அமையுமென கூறிய அவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல நதிகளை இணைக்க மக்கள் போராட்டம் நடத்த முன்வரவேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். 

விவசாயிகள் தற்கொலைகளுக்கு வங்கிக்கடனே காரணமெனவும், விவசாயிகள் தற்கொலையை தடுக்க தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். 

வறட்சி பாதிப்புகள் தொடர்பாக மத்திய குழுவினர் கண்துடைப்பிற்காக பெயரளவு ஆய்வு நடத்தியதாகவும், அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார். 

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கி வரும் நிதி நின்று போக வாய்ப்பிருப்பதால், தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென ஈஸ்வரன் வலியுறுத்தினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...